Skip to main content

Posts

Showing posts from January, 2022

எனது “Stuck in the Days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley” புத்தகத்திற்கு உலக சூழலியல் நிபுணரும், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் முன்னாள் இயக்குனருமான பேராசிரியர் பி.ஏ.அஜீஸ் அவர்கள் அளித்துள்ள முன்னுரை:

  சுற்றுச் சூழல் மீது மனிதனால் தினிக்கப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகியுள்ள விளைவுகள் குறித்த மற்றுறொரு புத்தகம் அல்ல இது.  மனித நேயம், தேடுதல் மற்றும் உள்ளுணர்வு கொண்ட இளம் பெண் ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள சமூகவியல் மற்றும் சூழலியல் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்து அதன் இன்றைய நிலைக்கான காரணங்களை வெளிக்கொண்டு வர எழுதிய புத்தகமே இது. கடந்த பல ஆண்டுகளாகத் தன்னைச் சுற்றியுள்ள நிலம் எப்படிப்பட்ட மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது என்பதனைக் கூர்ந்து கவனித்துவந்த அவரை அன்மையில் வந்த மழை நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தினை எழுதத் தூண்டியுள்ளன. உள்ளுர் நில வெளியானது எப்படிப்பட்ட கொடூரமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதனை அவர் இந்தப் புத்தகத்தில் மிகவும் நிதானமாகவே முன்வைக்கின்றார்; எனினும், வரவிருக்கும் நாட்கள் குறித்து அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்; மாற்றத்துக்குள்ளாகியிருக்கும் தன்னைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கினை அதன் முந்தைய சூழலியல் நிலைக்குக் கொண்டு செல்கின்ற புத்துயிர் அளிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடத் துடிக்கும் அவர்,  நம்பிக்கை நிறைந்த உறுதிமிக்க ஒரு இள...

தடாகம் பள்ளத்தாக்கு குறித்த எனது புத்தகம் பற்றி… சாந்து

  “செழுமையில் வறுமை: தடாகம் பள்ளத்தாக்கின் நீரோடைகளின் விசித்திரமான நிலை” (Stuck in the Days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley) என்ற புத்தகத்தை நான் 2021 டிசம்பர் மாதம் ஆங்கிலத்தில் எழுதி முடித்தேன். 2021 அக்டோபர் நவம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் கொட்டிய பெருமழை, கோவை மாவட்டத்திலும் அங்குள்ள தடாகம் பள்ளத்தாக்கிலும் பெருவாரியாகப் பொழிந்தது. அந்த மழையின்போது தடாகம் பள்ளத்தாக்க்கில் நிகழ்ந்த விசித்திரமான நிகழ்வு ஒன்றே இந்தப் புத்தகத்தை நான் எழுதத் தூண்டிய முக்கியக் காரணமாகும். காவிரியின் முக்கிய உபநதிகளில் ஒன்றான நொய்யல் நதியின் கிளை ஆறான சங்கனூர் ஆறு (சங்கனூர் பள்ளம்) தடாகம் பள்ளத்தாக்கில் உருவெடுக்கிறது. மேற்குத் தொடர்ச்சிமலையின் நீட்சியாகக்  குதிரை லாடம் போல வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் அமைந்துள்ள மலைகளுக்கு உள்ளில் தடாகம் பள்ளத்தாக்கு கிழக்கு நோக்கி நீள்கிறது.   கோவை நகரின் வடமேற்கு எல்லையில் சுமார் 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து வழிந்து ஓடும் சங்கனூர் ஆறு கோவை நகரத்தை இரண்டாகப் பிரிக்கிறது. நகரின் தென்...